ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஓ என் நெஞ்சமே...



வெட்ட வெட்டத் தலைக்கும்..
வாழை மரம் போல...
நீ வெறுக்க வெறுக்க..
உன் மேல் என் அன்பு ...
வளர்கின்றதே....

மண் கேட்டு மழை வருவதில்லை...
நீ கேட்டு நான்
பாசம் வைப்பதில்லை...

தொட்டுச் செல்லும் காற்றைப்போல...
உன்னைத் தொட்டுச் செல்லுகின்றது என் நினைவு...

பட்டுத் தெறிக்கும் ஆதவனைப்போல்.....
என் நினைவு உன்னில் மட்டுமே...
பட்டுத் தெறிக்கின்றது.....

சித்திரை மாத வெய்யிலைப்போல்..
என்னை சுட்டெரிக்க வேண்டாமே..

மார்கழி மாத பனி போல்..
குளிர் காலத்து நிலவு போல்...
உயிரோடு உலாவரும் உறவு போல்.....
அந்தியில் மணக்கும் மல்லிகையாய் நானிருப்பேன்.

கருத்துகள் இல்லை: