ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஆடையில் ஆசை.....

1.gif

ஆடைகள் நூறு வகை...
அதை ஆளும் வகை - அது
ஆளாளுக்கு சிறந்த கதை..

மேடை தனில் ஒரு வகை...
மேலோர் கீழோர் தாங்கி
வரும் வேறொரு நிலை..

மங்களத்திற்கு ஒரு வகை..
மயான அமைதிக்கு ஒரு வகை..

கட்சிக்கு ஒரு வகை....அது
காட்டும் பொருளில் இருள் ஒளி வேறு நிலை..

பாவலருக்கு ஒரு நிலை..
பள்ளிச் சிறுவர்களுக்கு வேறொரு நிலை..

நாடு விட்டு நாடு போனால்..
நாமும் தேடும் அந்த உடை..

கூடு விட்டு ஆவி போனால்..
கூடி நிற்போர் காட்டும்....கருப்பு வெள்ளை..
அது தரும் மன நிலை..

போதி மரத்து புத்தரும்..
போதனை தரும் வள்ளரும்..
போர்த்திருக்கும் காவி தனை..
ஆடவரும் மங்கையரும்....
ஆடையதுவே என்றே தேந்தெடுத்தயாடையது.....


பாலுக்கு ஒரு ஆடை...
பாலகனுக்கும் ஒரு ஆடை...
நீதிக்கு ஒரு ஆடை...
நீதி தேவனுக்கு ஒரு ஆடை...

காவலுக்கு ஒரு ஆடை..
தாதிக்கு ஒரு ஆடை..

வைத்தியனுக்கு ஒரு ஆடை..
வையகத்திற்கு ஒரு ஆடை..

எத்தனை ஆடை வந்திடினும்..
அத்தனையும் அதன் வெளித் தோற்றமே..

வெள்ளாடையெனும்...
கலங்கமில்லா உள்ளாடை நீ நெஞ்சத்தில்
கொண்டிருந்தால்..

அழுக்குள்ள ஆடையிலும்..
தூய்மை அங்கே வெளுத்து நிற்கும்.
அதுவே நீ கொண்டிருக்கும்
சிறந்த ஆடையென்பேன்.

வெளித்தோற்றத்தைக் கண்டு நம்பி விடாதே..
வெள்ளையுள்ளம் எங்கே என தேடிச்சென்று...
உள்ளே அகம் கண்டு கொள்வாய் நன்றே.

கருத்துகள் இல்லை: