திங்கள், 31 மார்ச், 2008

உள்ளம் பேசுகின்றது.














எங்கையோ..பிறந்து வளர்ந்து..
எதிர்பாராமல் சந்தித்துக்கொண்ட..நாம்..
இன்று மண்ணுக்கடியில் இருக்கும்...
வேர்கள் போல...மனதி்ற்குள் மட்டும்..
ஆழப்புதைத்து.. நினைவுகளை மட்டும் படரவிட்டு...

அழும் குழந்தை..
அன்னை குரல் கேட்டு...
அடங்குவது போல....

இன்னும் உன் ஓசைக்காக...
அது இசையாக வரும் இனிய கீதத்திற்காக...
எண்ணப்பறவைகளை ...சிறகடித்து பறக்கவிட்டு..
பார்த்துக்கொண்டிருக்கிறேன்...

ஆகாயப்பறவை போல..நீ....உயரத்தில இருப்பதால்...
அங்கிருந்து பார்க்கும் போது...
என் அன்பும், நட்பும் மிகச்சிறியதுதான்...

வா...ஒருமுறை...என் இடத்திலிருந்து பார்...
மெளமான என் உள்ளம்...
சொல்லும் கதைகள்..உனக்குப் புரியும்.

கருத்துகள் இல்லை: