திங்கள், 31 மார்ச், 2008

தென்றல்..



இயந்திரமயமான உலகில்..

இயந்திரங்களோடு எட்டுமணிநேரவேலை பார்த்து..

வேதனையில் வெளியேற..


அதிகாலைப்பொழுதில்..

உடலும் உஷ்ணமடைய...

உள்ளமும் தளர்ச்சி காண..

உதயத்திற்கு முன்னாடி..

கடமைகளை முடித்தவளாய்..

காடோ, வீடோ நம்ம நாடே..

நல்லது என்று எண்ணியவளாய்..

நடையைக்கட்ட வீடு விரைய...


அற்புதமான தென்றல் ஒன்று..

மெல்லத்தழுவிக் கொண்டு..

கொண்ட துன்பம் அத்தனையும்..

துடைத்தெறிந்து மனத்தீபம் ஏற்றிச்சென்றது.

கருத்துகள் இல்லை: