திங்கள், 26 ஏப்ரல், 2010

ஏனிந்தக் கொடுமை...?



பாவம் இந்தக் குருவிகள்..
பகலிரவாக காத்துவந்தன தம் குஞ்சுகளை..
பகலவன் வரும் நேரம் பறந்து பறந்து..
பசிக்கு உணவு தேடி களைத்து வந்து இளைப்பாறும் மரங்களை..
ஊருக்கு இடைஞ்சலென..
ஊரார் சேர்ந்து ஒட்ட வெட்ட..
ஊசிற்தூற்றல் ஒருபுறம் பெய்ய..
ஊமையாய் கதறிக் கதறி குருவிகள்..அழுதன

இத்தனை நாள் நிழலுக்காக
ஒதுங்கிய மக்கள் மறந்தன நன்றி..
இதுநாள் வரை முதியோரின் சங்கமாகயிருந்த
அந்த மரம் சரிந்து தரையிலே விழுந்தன...
அங்கே குஞ்சுகளும் அதற்குள் நசுங்கிப் போயின..
அந்நிலை கண்டு என் மனம் கலங்கின..

இந்த மரம் இல்லையென்றால் நாம்
இதுபோல் இன்னுமொரு மரத்தை நாடிச்சென்றிடலாம்..
இத்தனை நாட்கள் அடைகாத்து குஞ்சுகளைக் கண்ட..
இச்சிறிய பறவைகளின் நிலையை எண்ணி மனம் அழுகின்றது..

கருத்துகள் இல்லை: