ஞாயிறு, 24 அக்டோபர், 2010

பாவம் இவர்கள்..



ஏதோ ஒரு படம் தேட..
என் கண்ணில் பட்ட இந்தக் காட்சி..
கண்டதும் ஒரு கனம்..
நெகிழ்ந்தது நெஞ்சம்..


போர்த்துக்கொள்ள போர்வையின்றி..
உடுத்திக் கொள்ள ஆடையின்றி..
அள்ளி அணைக்க யாருமின்றி..
யாரோ விதைத்த விதை..
வீதியில் நாதியற்றுக் கிடக்கின்றதே..


நிஜமாக
பார்த்தால் பார்க்காமல் போகாதீர்கள்..
பராமரிக்கும் இடமிருந்தால்...
பக்குவமாய் அங்கே சேர்த்துவிடுங்கள்..

ஆலயங்கள் இனித்தேவையில்லை..
அதிகமாகவே இருக்கின்றது..
அனாதையாக அலையும்..
அபலைகளுக்கும், ஏழைகளுக்கும்..
கட்டிடுங்கள் பாதுகாப்பான இல்லம்.
______________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

கருத்துகள் இல்லை: