
கடலைகள் ஒரு முறை அவை
தரையைத்தொடும் அழகை நிறுத்தக்கூடும்...
வெய்யில் மழையில் வரும் வானவில்லும் அவை
நிறங்களை மாற்றி தரக்கூடும்..
இரவினில் வலம் வரும்..நிலவுகூட அது
தன்னையே மறந்து வராமலே விடக்கூடும்..
மடியினில் உறங்கும் குழந்தைகூட அது
உறங்காமலே விழித்திருக்கக்கூடும்....
உறங்காமலே விழித்திருக்கக்கூடும்....
கொடிதனில் ஆடும் சிறு இலைகள்கூட அவை..
அப்படியே ஆடாது நிறுத்தக்கூடும்..
அப்படியே ஆடாது நிறுத்தக்கூடும்..
காய் தரும் பழம் கூட அது
காய்க்காமலே போகக்கூடும்...
வரும் மழை கண்டு தோகை விரித்தாடும் மயில்கூட
அதுதோகைவிரிக்காது முடங்கிப்படுத்துறங்கக்கூடும்..
தரும் தென்றல் சுவாசத்தில் மலர்கள் ஒருதடவை...அவை
இதழ்கள் விரிக்காது மெளனமாய் மொட்டுக்களாகக்கூடும்...
சுடும் வெப்பம் கூட அது
தரும் குளிராகமாறிவிடக்கூடும்..
தொடர் தரும் இடர்கூட இன்றேஅவை
துயரின்றி வரும் நிலைவரக்கூடும்..
தரும் உன் நினைவின் நினைவுகள் அவை
மாறாது வரும் தினம் வலம்வரும் மெய் உருகும் நிலைவரையும்.
வெறும் எழுத்துக்களால் கோர்த்திட்டதால்..அவை
அழியும் நிலை வரும்...அழியாது தினம் தரும் நினைவுகள் மனதில்வலம்வரும்.