இது என்ன நிஜமா அல்ல நிழலா..
உயர உயரப் பறக்கும் பட்டம் போல..
இரு நூலில் ஆடும்
ஊஞ்சல் இங்கேயுமுண்டு...
கலகம் ஏதுமில்லை களிப்பூட்டும்..
தளமுண்டு..
நிஜமா இது நிழலா...?
வறியோரின் வாசலில்..
வசந்தமுமுண்டு..
நிழலா அல்ல நிஜமா...?
கோடிக்கணக்கில் துன்பமுண்டு..
ஆடித் தீர்திடலாம்...வா இங்கு...
நிஜமா இங்கு நிழலா..?
ஓலைக் குடிசையிலும்...
ஒற்றுமையாய் நாமுங்கு...
நிஜமா இது அல்ல நிழலா..?
வாழப்போகும் பைங்கிளிகள்..
ஆடித்திரிவது காண்கீர்..
நிஜமா அல்ல நிழலா...?
ஏழைக் குடிசையிலும்..அவர் தம் சோக கீதம்..
எட்டுத் திக்கு கேட்டினும்..
ஏன் என்று கேட்பாரின்றி வாழும் இந்த...
சமூகம் வாழ்வது நிஜமா அல்லது நிழலா.....?
செல்வக் குழந்தைகளின்
சிரிப்பில் ஆதவன் வந்தமர்ந்து..
ஆனந்தமாய் சிரிக்கின்றான்..
உரைத்திடுவீர் நீவீர்..
பாதியுகம் அழிந்திட்டாலும்..
பார் புகழும் சிறுவர்கள்..
நாமன்றோ......நிஜமா......அல்ல நிழலா...
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
"மதியின் மனவானில்"
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=14773
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக