
முகமறியா முகவரியே
முதற்கண் வணக்கம்
உனைத் தெரியாத
எனக்கேன் அறிமுகம்
அண்ணனா, தம்பியா
அக்காவா, தங்கையா
உறவுக்காரனா, நண்பனா
யாரானாலும் யார் நீ
என்னிலை அறிந்து
எனக்கேன் அனுப்புகிறாய்
வாழ்த்துக்கள் கையில்
கிடைத்தபோது மகிழ்ச்சி
வருகின்ற நூல்கள்
சிறு சிறு கதைகள்
எல்லாமே நன்றாகவே
நாகரீகமாகவே உள்ளதே
பக்கங்களை புரட்ட
மனப் பக்குவம் இல்லையே
தொடர் கதையாய் நீயும்
சிறு கதைதான் நானும்
எனக்காக நீ அனுப்பியநூல்களால்
உனக்காகநூல்நிலையம் திறக்கலாம்
மறைக்காமல் சொல்லிவிடு
சொந்தம் என்ன எமக்குள்
சொல்லி விட்டு அனுப்பிவிடு
தயங்காதே தழிழரே
தந்திடுவாய் உன்நாமத்தை
அறிய ஆவல் தான்
பார்க்க ஆசைதான்
ஆசையால் நீ அனுப்பியதுபோதும் போதும்
உன் வாழ்த்துமடல்கள்
வாழ்க்கையில் மறக்கமாட்டேன்
சுகமான உன் ஊடல்கள்
சுமையான என்தேடல்களாயிற்று
.--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி