அடிப்பாவி..
என் கல்லறைக்கு
கண்ணீர் பூக்களால்
அலங்காரம் செய்கின்றாயே இப்பொழுது..
அப்பொழுதே எம் காதலுக்கு...
மலர்களால் மாலை சூடியிருந்தால்..
காதல் பூக்களால் காலமெல்லாம் வாழ்ந்திருப்போம்..
கண்கெட்ட பின்பே சூரிய நமஸ்காரம் எதுக்கடி..?
மனதை சிதைக்கத் தெரிந்த மாதுவே...
இந்த மலர்களையாவது மரத்தோடு விட்டுவிடு...
மலரஞ்சலி எதுவும் வேண்டாம்..அவைகளைாவது
ஒரு நாளாவது உயிருடன் வாழ்ந்துவிட்டுப்போகட்டும்.
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=14414
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக