கடந்த கால நினைவுகள்..
உடைந்த மனதில்
ஆலமரவேராய் ஆழப்பதிய..
முகம் தெரியாத நீயூம்..
அறிமுகமில்லாத நானும்..
நட்பெனும் அன்பால்
இணையத்தில் இணைந்து..
இன்றோடு ஆண்டுகள்
இரண்டாயிற்று..
இன்னும் நான் மறக்கவில்லை
அன்பால் நட்பால்..நீ கூறிய
அழகான அறிவுரைகளை..
நடந்து வந்த பாதையில்
காலில் குத்திய முள்ளு தானே..
தூர தூக்கி எறி..என்றாய்..
பாதையைப் பார்த்து நட
பாதியிலே வந்த துன்பம்..அது
தேடி அலைந்து போகாதே..என்றாய்..
மீதியுள்ள அழகான வாழ்வை
மீண்டும் அமைத்துவிடு
அழகிய நந்தவனமாக..என்றாய்..
ம்..
நினைத்துப்பார்க்கிறேன்..
அருகில் இருந்து கூறியது போல
அன்பான வார்த்தைகளால்..
நட்பெனும் பூந்தோட்டத்தில்
அன்பெனும் மலர்களால்
இன்னும் பல ஆண்டுகள்
பூத்திருப்போம்..
நண்பா உனக்கு
நன்றி சொல்லி நம்
நட்பைப் பிரிக்கவில்லை..
உன்னைக் கண்டு கொண்ட
நாளுக்காய் ஓர் நன்றி மட்டும்.
2 கருத்துகள்:
உன்னைக் கண்டு கொண்ட
நாளுக்காய் ஓர் நன்றி மட்டும்
nalla sinthanai
நன்றி அபி.
கருத்துரையிடுக