அன்றொரு பருவத்தில்
அழும் குழந்தையாய் நானிருக்க..
அன்போடு அம்மா கூறிய வார்த்தைகள்..
அதோ பார்..
இருண்ட வானில் மிளிரும்
அழகழகான நட்சத்திரங்கள்..
ஓ..
எண்ணவே முடியல்லையே..
எண்ணிலடங்கா நட்சத்திரங்கள்..
ஆமா..எப்படி..?
ம்....
இங்கு இறந்தவர்கள்
அங்குதான் ஜொலிக்கிறார்கள்..வெள்ளியாக..
இப்போது அமைதியாகப் பார்க்கிறேன்..
நீகூட அழகாகத்தான்....இருக்கிறாய்..
என் அம்மாவும் கூடவே அங்கேயிருப்பதால்.
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10878&st=0#entry146287