அதிகாலைப் பொழுதில் நடந்து பார்..
உன் காலடி ஓசையைத் தவிர..
எந்த ஓசையும்
உனக்கு கேட்காது..
கண்கள் காணும்
காட்சிகளை ரசித்துப் பார்..
கவலைகள் எதுவும் மனதில்
கிட்ட நெருங்காது..
புதிய நாளை இன்முகத்தோடு..
வரவேற்றுப் பார்..
காக்கை கூட உன் அருகில்
வந்து கவி பாடும்..
தாவிச் செல்லும் அணிலும்..
ஓடி வந்து உன் தோள் சாயும்..
படபடவென்று பட்சிகள்...
ஒன்றாகப் பறந்து..
இயற்கையை ரசிக்க..
நேர் வரிசையாகயிருந்து
மின் கம்பியில் ஊஞ்சலாடும்..
தத்தி தத்தி
சின்னக் குருவிகள்..
கொத்தி கொத்தி இரை தேடும்..
வீட்டைக் காக்கும் நாய் கூட..
வீதி வரைக்கும் வந்து..
வாலை ஆட்டி மகிழ்ந்துகொள்ளும்..
அதிகாலைத் தென்றல்..
உலா வரும் நேரம்.. மெல்லிய குளிரில்
உன் தேகம் நனைந்து
மனம் களிப்புறும்..
வீதிகளுக்கு விடைமுறை
கிடைத்தது போல்..
எந்த போக்குவரத்து சலனமுமில்லாமல்..
அமைதியாக உறக்கம் கொள்ளும்..
எங்கிருந்தோ வந்த பூனைக்குட்டிகள்..
கால்களை உள்ளே மடக்கி..
மெல்ல தலையைக்குனிந்து
ஒன்றையொன்று பார்த்து
புன்முறுவல் செய்யும்..
மெல்ல வீசும் காற்றில்..
காகிதச் சருகுகள்..
ஓடி ஓடி ஓய்ந்து கொள்ளும்..
புத்தம் புது மலர்கள்..
பனித்துளிகள் பட்டு..
முகம் கழுவிக்கொள்ளும்..
ஞாயிறு வருகை கண்டு..நாணத்தால்
திங்கள் மெல்ல தன் முகத்தை..
மேகத்துனுள் ஒளித்துக்கொள்ளும்..
ஒளிரும் நட்சத்திரங்கள்..
விடியும் பொழுதில்..
தம் போர்வைக்குள்..
முடங்கிக் கொள்ளும்..
அதிகாலைப் பொழுதில்
நடந்து பார்..
மனம் அமைதியாகயிருந்து....
புது ராகம் இசைக்கும்..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11538
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக