
மனிதன் செய்த
வஞ்சக மின்சார வலையில்..
சிக்குண்டு
அநியாயமாக
தம் உயிர்களை
மாய்த்துக் கொண்ட..
ஏதும் அறியாத
அப்பிராணி உயிர்கள்...
அவனுக்கென்ன..
மரம் இருந்தாலும்
நிழல்..
இறந்தாலும்
விறகு..
அதுபோல்..
செத்தது மாடுகள் தானே..
அதன் பாலைக்குடித்தான்..
இனி தோல எடுத்து
மேளம் அமைத்து
அடிச்சுப் பார்த்து ஆட்டம் போடுவான்..
அவன் ஆட்டம் அடங்கும் போது..
இந்த மாட்டுத் தோல் அவனுக்காக
அப்பவும் இசையாகப் பேசும்..
(படத்தைப் பார்த்தவுடன் மனசு கலங்கிறது. அதனால் கிறுக்கியது இது)
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11329