
இங்கும் கேட்கின்றது..
தீபாவளியின் சர வெடிகள்..
வருடத்தில் ஒரு நாளில் இல்லை..
வருடம் முழுக்க
விரும்பாத வெடிகளாய்..
விரக்தி வாழ்வின் வெளிச்சங்களாய்..
எரியும் நெருப்பில்..
எழமுடியாத வடுக்களில்..
கண்கள் எரிந்து கண்ணீரால் அனைந்து..
இதயம் படபடக்க..
விழிகள் விழித்திருக்க..
இரவென்ன பகலென்ன...
காதைப் பிளக்கும்..
கண்ணைப் பறிக்கும்..
உயிரைக் கொல்லும் தீயின் வலி..என் தீபாவலி.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
www.nilafm.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக