
இறக்கையடித்துப் பறக்கும்
பட்டுப்பூச்சி சத்தமின்றி
பூவிற்கு கொடுக்கும் முத்தம் போல்..
வட்ட நிலா அவன்
மெளனம் மட்டும் பேசும்
என்மனதோடு அமைதியாய் என்னாளும்..
கிட்ட வந்தான் ஒரு பொழுதில்
எட்டப்போகுமுன்
தொட்டுவிடத் துடித்தான்..
பட்டுப்போன்ற அவன் கரங்கள்
தொட்டவுடன் அன்று பெய்த
மழையில் நனைந்த பூவாய் ஆனேனே..
புருவம் ஒன்றை
தொட்டுக்கொண்டிருக்கும் அவன்கேசம்
எனக்கும் வளர்ந்தது அதுபோல் அவனில் நேசம்..
அதிகாலைச் சூரியன் இரண்டாய்
திரண்டு வந்தது போல்
ஒளிமிகுந்த அவன் பார்வையில்
நானும் ஒளிந்து கொண்டேனே...
அதிகம் உதிராத பூக்கள்
அவன் வார்த்தைகள்
அதனால்தான் என்னவோ
அதுவே அவன் தந்த கவிதைகள்..
கவிதைகள் எழுதவில்லை
காரணம் நான் கேட்கவில்லை
புரிந்து கொண்டேன் அவனே ஒரு கவிதை தானே..
உயரத்திலிருந்து வந்த நீர்வீழ்ச்சி
பரந்து விரிந்து பல பெயர்கள் கொள்வதுபோல்..
அவன் ஒருவனே பலகலைகளையும்
பக்குவமாய் அறிந்து ஆற்றல்கொண்டுள்ளானே..
கல்லூரித்தோழிகளோடு கற்பனையில்
உலகம் சுற்றி வந்ததுபோல்
அவனோடு அழகிய நினைவினில்
அடிக்கடி நானும் இனிய கற்பனையில்..
நிலாவைத்தேடி விண்ணுலகம் சென்றோர் பலர்..
நினைக்கவில்லை நானும்
நிலாவே என் அருகில் வந்தது போல் ஓர் சுகம்.
-----------------------------------------------------------
கொடுத்து வாழ்..
கெடுத்து வாழாதே..
நிலாவில் உலாவரும் "தனிமதி"
www.nilafm.com