
கண்கள் உன்னைத் தேடி..
மனக்காயங்கள் பல சுமந்து..
வீதியோரத்தே தனிமையாய்..
நின்ற தேர்போல நானும்..
தவிக்கையில்...பசுமையான காலம் போய்..
இலையுதிர் காலமாய்..
இலைகள் உதிர்ந்து..
பனியில் மூழ்கி மரங்கள்..நிற்கையில்..
அடுத்த வசந்ததிற்காக..
கிளைகளும் கொப்புகளும் மட்டும் சுமந்தபடியே..
சுவாசிக்கும் மரங்கள்போலநிழலின்றி நிஜமுடனும்..
உன் வரவை எதிர்பார்த்தபடி ..நானும்..
மனச்சுமைகளை இறக்கிமறுபடியும் வரும் வசந்தம் காண.
எதிர்நோக்கையில்..வீதியோரத்து உயரமான விளக்குகளால்..
பாதிக் கிராமமே ஒளிவீசியது போல..
தூர இருந்து தரும் நிலவொளி நீயாய்..
என்னருகில் இருந்து தினம் வரும்நிலா...
நீதான்என் சுவாசமே.
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக